Wednesday, May 5, 2010

பாடம் 057: இஸ்லாமிய மதம் தவறு (பிரம்ம சூத்திரம் 2.2.28-32)


தர்ம-அதர்ம விவேகமும் சமூக கட்டுப்பாடுகளும் இல்லாமல் நாடோடிகளாக அரேபிய பாலைவனத்தை சூழ்ந்து வாழ்ந்து வந்த மக்களிடையே கடவுள் பக்தியை ஏற்படுத்த அல்லாவின் அருளால் குரானை எடுத்து ஓதினார் முகமது நபி அவர்கள். கடவுளின் இவ்வார்த்தைகளின் அடிப்படையில் தோன்றிய இஸ்லாமிய சமயம் இன்று உலகின் இரண்டாவது பெரிய மதமாக வளர்ந்துள்ளது. இந்த மதத்தில் உள்ள வேதத்துக்கு மாறான கருத்துக்களை இந்த பாடம் சுட்டிக்காட்டுகிறது.  

குரானும் வேதம்

எப்படி கடவுளின் செய்தியை முனிவர்கள் கேட்டு நமக்கு வேதமாக வழங்கினார்களோ அதே போல்தான் முகமது நபி அவர்களும் கடவுளிடமிருந்து குரானை பெற்றார். மக்களின் மனமுதிர்ச்சிக்கு ஏற்றாற்போல் குரானில் ஏழு அடுக்குகளாக செய்திகள் கொடுக்க பட்டுள்ளன. கேள்விகள் கேட்டு பதிலை புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவுத்திறன் இல்லாதவர்களை வேதத்தின் கர்மகாண்டம் வழிநடத்துவது போல குரானின் வாக்கியங்களின் மேல்கட்ட பொருள்கள் மக்கள் பின்பற்றவேண்டிய கட்டளைகளை கொடுத்துள்ளன.

முறையான ஆசிரியர் பரம்பரை இல்லாததால் குரானின் மற்ற ஆழ்ந்த பொருள்கள் மக்களுக்கு தெரியாமல் சமயத்தின் தொடக்க கட்டத்திலேயே இஸ்லாமிய மதம் தேக்கமடைந்து விட்டது. எனவே ஏன், எப்படி என்ற கேள்விகள் கேட்கும் பகுத்தறிவாளர்களுக்கு கடவுளின் உண்மையான செய்தி குரானிலிருந்து கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

லா இலாஹி இல்லல்லா!

அல்லாவைத்தவிர வேறு கடவுள் யாருமில்லை என்பது இதன் முதல் கட்ட பொருள். கடவுள் பக்தியில்லாத நாடோடிகளை கடவுள் பக்கம் திருப்ப கூறப்பட்ட இந்த கருத்து தவறுதலாக மற்ற மதங்களின் கடவுளர்கள் பொய்யானவர்கள் என்ற அர்த்தத்தில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இருப்பது ஒரு கடவுள். ஒவ்வொரு மதத்தினரும் அந்த ஒரு கடவுளை வெவ்வேறு பெயரில் அழைக்கிறார்கள் என்ற உண்மையை மூடநம்பிக்கையுடையோர் மட்டுமே ஏற்றுக்கொள்வதில்லை.

தாகத்தை போக்குவதற்கு உபயோகப்படும் பொருளை தண்ணீர் என்று தமிழர்களும் பானி என்று ஹிந்தி மொழி பேசுபவர்களும் வாட்டர் என்று ஆங்கிலேயர்களும் குறிப்பிட்டாலும் இருப்பது ஒரு பொருள்தான். அது போல எந்த பெயரில் அழைத்தாலும் இருப்பது ஒரே கடவுள்தான் என்பது குரானின் லா இலாஹி இல்லல்லா என்ற தொடரின் பொருள்.

இது முதல் கட்ட பொருள்தான். மன பக்குவம் பெற்றபின் இதே தொடர் கடவுளைத்தவிர வேறு ஒன்றுமேயில்லை என்ற பொருளை கொடுக்கும். கடவுள்தான் இந்த உலகமாக காட்சியளிக்கிறார் என்ற சரியான கருத்தை அறிந்து கொண்டால்தான் முக்தி கிடைக்கும்.

முக்தி என்பது அல்லாவின் கருணையால் மரணத்துக்குபின் கிடைப்பது

இதுவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு கருத்து. குழந்தை பிறப்பதை இஸ்லாமிய மதத்தவர்கள் ஒரு சோக நிகழ்வாக கருதுகின்றனர். அல்லாவிடமிருந்து விலகி இவ்வுலகில் வந்து மனிதனாக பிறப்பதாகவும் பிறந்தது முதல் சிறிது சிறிதாக 'நான்', 'எனது' என்ற மனிதனுக்கே உரித்தான அகங்காரத்தை வளர்த்து அல்லாவின் பாதையிலிருந்து மேலும் விலகுகிறான் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். குரானில் கூறப்பட்ட ஐந்து கட்டளைகளை தொடர்ந்து கடைபிடித்து பின் மரணமடைந்தால் அல்லாவின் சாம்ராஜ்யத்தில் மீண்டும் சேர்ந்து சுகமாக வாழும் வாய்ப்பு கிடைக்கும் என்பது அவர்களின் தவறான நம்பிக்கை.

எனவேதான் அவர்கள் மரணத்தை ஒரு மகிழ்வான சம்பவமாக நினைக்கிறார்கள்.

உண்மையில் 'நான்', 'எனது' என்ற அகங்காரத்தை தொலைப்பது மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். எப்பொழுது நான் வேறு இந்த உலகம் வேறு என்ற எண்ணம் ஏற்படுகின்றதோ அப்பொழுது நாம் இறைவனின் பாதையிலிருந்து அகலுகிறோம் என்பது உண்மை.

குரானில் கூறப்பட்டுள்ள கட்டளைகளை பின்பற்றி நாம் கடவுளின் ஒரு அங்கமாகத்தான் இந்த உலகில் செயல் படுகிறோம் என்ற உண்மையை உணர்ந்து கொண்டால் நாம் இங்கேயே இப்பொழுதே முக்தியடையலாம். ஆனால் பெரும்பாலான மக்கள் குரானில் குறிபிடப்பட்டுள்ள இந்த ஆழ்ந்த பொருளை அறிவதில்லை.

அல்லாவின் கருணையை பெற இடைத்தரகர்கள் தேவையில்லை

இறுதி கட்டளை நாளன்று (Judgment Day) கடவுள் சிபாரிசு கடிதம் இருக்கிறதா என்று யாரிடமும் கேட்கப்போவதில்லை என்பது உண்மை. ஆனால் எல்லா மக்களும் நேரடியாக குரானை படித்து அதில் என்ன எழுதியுள்ளது மற்றும் அதன் உண்மை பொருள் என்ன என்பதை அறியும் சக்தியற்றவர்கள் என்ற உண்மையை கருத்தில் கொண்டால் சமய ஞானிகளின் அவசியம் புரியும். செய்ய வேண்டிய செயல்களை முதல் பாகமான கர்மகாண்டத்திலும் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையை இறுதிபகுதியான ஞானகாண்டத்திலும் வேதம் தொகுத்து கொடுத்திருப்பதுபோல் குரான் அமையவில்லை. ஒரே சொற்றொடருக்கு பல்வேறு பொருள் கிடைக்கும்படி அனைத்து செய்திகளும் ஒன்றினுள் ஒன்று புதைக்கப்பட்டுள்ளன. சமய ஞானியின் வாய்மொழியாக கேட்டாலன்றி சாமான்ய மக்களால் குரானில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களையும் உண்மை பொருளையும் அறிந்து கொள்ள முடியாது.

முடிவுரை :

இஸ்லாம் மதத்தை பின்பற்றாத அனைவரும் நரகத்துக்கு செல்வார்கள் என்ற ஒரு கொள்கை மட்டுமே அம்மதத்தை தவறான மதம் என்று நிறுவ போதுமான சான்று. மேலும் இவ்வுலக வாழ்க்கையின் ஒரே நோக்கம் அல்லாவை திருப்தி படுத்தும் வகையில் வாழ்ந்து மரணமடைந்தபின் சொர்க்கத்தில் இடம் பிடிப்பது மட்டும்தான். குரானில் சொல்லியபடி நம் வாழ்க்கையை முற்றிலுமாக அமைத்துகொண்டாலும் அல்லாவின் கருணை இருந்தால் மட்டுமே சொர்க்கம் கிடைக்கும். இது போன்ற தவறான கொள்கைகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றினால் தடைபடாத அமைதி நிச்சயம் கிடைக்கவே கிடைக்காது என்பதை தெளிவு படுத்துகின்றன.

சொர்க்கம் எங்கிருக்கிறது, அதில் பணிபுரியும் அடிமை பெண்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பது போன்ற கேள்விகளை அறிவை பயன்படுத்தி கேட்க இயலாதவர்கள் மட்டுமே இஸ்லாமிய மதத்தை பின்பற்ற தகுதியானவர்கள். இப்படிபட்ட மக்களை, குரானை தவறாக மேற்கோள் காட்டி தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்தி பயங்கரவாதத்தில் ஈடுபடுத்துவது மிக எளிதான செயல். எனவே இஸ்லாமிய மதம் இருப்பதால் உலகம் பெறும் நன்மையைவிட தீமைகள்தான் அதிகம். ஆயினும் ஆண்டவனின் குறிப்பிட்ட ஐந்து கட்டளைகளை (ஐந்து முறை தொழுதல், ரமதான் மாதம் விரதம் இருத்தல், தானம் கொடுத்தல், அல்லாவை ஒரே கடவுளாக நம்புதல் மற்றும் வாழ்நாளில் ஒரு முறை மெக்காவுக்கு பயணித்தல்) கேள்வி கேட்காமல் பின்பற்றினால் மட்டும் போதும் என்ற மனோபாவத்துடன் பலர் இவ்வுலகில் இருப்பதால் இஸ்லாமிய சமயம் வெகு வேகமாக பரவி வருகிறது.

பயிற்சிக்காக :

1. இஸ்லாமிய மதம் தோன்றியதன் அவசியமென்ன?

2. இஸ்லாமிய மதம் தவறானது என்ற முடிவுக்கு வர என்னென்ன காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன?

3. குரானில் கூறப்பட்ட கடவுளின் செய்தியை அறிய ஆசிரியர்கள் தேவையா?

சுயசிந்தனைக்காக: :

1. அல்லாவின் ஐந்து கட்டளைகளை முழுதாக கடைபிடிக்காமல் சுவர்க்கத்தில் உறுதியாக இடம்பிடிக்க ஏதேனும் குறுக்கு வழி குரானில் கூறப்பட்டுள்ளதா?

2. பயங்கரவாதத்துக்கு காரணமாயிருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் இயக்கங்கள் தொடர்ந்து அதிகரிப்பதை கடவுள் அனுமதிப்பதன் காரணம் என்ன?